தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் சார்பாக இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களுடன் தங்களை இனிதே வரவேற்கிறோம் .
தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகியாக செயல்பட விரும்பினால் தங்கள் ஒப்புதலோடு தங்களின் பெயர், ஊர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உலகிலேயே மிக மிகப் பழமையான சமயம் நமது இந்து சமயம. இந்து சமயத்தின் தோற்றத்திற்கு கால வரையரை கிடையாது அனைத்து மதங்களின் முன்னோடியாகவும் அவற்றின் கருப்பொருளாகவும் இந்து சமயம் திகழ்கிறது.
நமது இந்து சமயத்தின் உட்பிரிவுகள் பல இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகவும் இறைவனின் அருள் ஆற்றலை பாமரரும் உணர்ந்து முத்திப்பேறு அடையவும் வழிவகுக்கின்றது.
கலை, கலாச்சாரம், ஓவியம் ,சிற்பம், அறிவியல், ஆன்மீகம், மருத்துவம், வானியல், புவியியல் என அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்ட செம்மையான மதம் இந்து மதம்.
கடந்த பல நூற்றாண்டுகளாக பல்வேறு வேற்று மத ஆட்சியாளர்களால் இந்து மதம் நசுக்கப்பட்டு நமது பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்கள் மதம் மாற்றப்படுவதும் நமது பொக்கிஷங்களான ஆலயங்கள் அழிக்கப்படும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
எனவே நமது பண்டைய இந்து தர்மத்தையும் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டையும் நிலைநாட்டும் வகையில் நமது தேசிய இந்து திருக்கோவில்கள் பவுண்டேஷன் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
நமது அமைப்பின் வாயிலாக பழைய புராதனமான ஆலயங்களில் உழவாரப்பணி செய்து அவை மீண்டும் பொலிவோடு விளங்க பணியாற்றி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் ஆலயங்களில் அன்னதானம் வழங்குதல்,ஆலயத் திருப்பணிக்கு உதவிகள் செய்தல் ,ஆலயக் குளக்கரை சீர்செய்தல், நந்தவனம் அமைத்தல் போன்ற ஆலயத் திருப்பணிகளையும் செய்து வருகிறோம் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி நிர்வாகிகள் அமைத்து இந்து சமய மக்களை ஒருங்கிணைத்து அரும் பணியாற்றி வருகிறோம்.
இவை மட்டுமல்லாமல் மருத்துவ முகாம்கள் அமைத்தல், ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி புரிதல்,பேரிடர் காலங்களில் பொது சேவை செய்தல், திருவிழாக்காலங்களில் பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் பல்வேறு வகையான சேவைகளை முழுமையாக செய்து வருகிறோம்.
கால மாற்றத்திற்கு ஏற்ப உன்னதமான சேவைகளை திட்டமிட்டு செயல்படுத்த நமது தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் ஆயத்தமாக இருக்கிறது.
"ஆலயத் தூய்மை ஆத்ம சேவை இணைந்தே செய்வது இன்றைய தேவை"
தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆலயங்களில் உள்ள யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கஜ பூஜை சிறப்பாக நடைபெற்றது புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் லட்சுமி யானை திருநள்ளாறு பிரணாம்பிகை சங்கரன்கோவில் கோமதி திருச்சி அகிலா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருச்செந்தூர் தேவயானை திருக்கடையூர் அபிராமி மற்றும் மயூரநாதர் சுவாமி ஆலயத்தில் உள்ள அபாயம்பிக்கை கும்பகோணம் பூமா திருச்சி அகிலா திருவையாறு தருமாம்பாள் ஆகிய யானை வடிவிலான கஜமுகனுக்கு கஜ பூஜை சிறப்பாக நடைபெற்றது அது சமயம் தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நமது அமைப்பின் சார்பில் ஆலயத் தூய்மை செய்வது நமது அனைவரின் தலையாய கடமையாகும்.
புராதான ஆலயங்கள் சீரமைத்தல் .
அனைத்து ஆலய திருவிழாக்களில் தன்னார்வலர்களாக பங்கேற்றல்.
மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு ஆன்மிக கல்வி அளித்தல்.
பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல்.
மாவட்ட வாரியாக அனைத்து ஆன்மீக அன்பர்களை ஒருங்கிணைந்து ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்ளுதல்.
தகுதி வாய்ந்த நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து பொறுப்புகளை அளித்தல்.
பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு அமைப்பு சார்ந்த பொருளாதார உதவிகள் வழங்குதல்.
இறைபணியை மேம்படுத்தி ஆலயங்களில் அன்னதானம் அளித்தல்.
தேசிய இந்து திருக்கோயில்கள் பவுண்டேஷன் அமைப்பின் நிர்வாகியாக செயல்பட விரும்பினால் தங்கள் ஒப்புதலோடு தங்களின் பெயர், ஊர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை பகிர்ந்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.